2023 ஆம் ஆண்டில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம் – ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம்!
ஃபேஸ்புக்கின் நிறுவனமான மெட்டா 2023 ஆம் ஆண்டில் மீண்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து மெட்டா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
பணிநீக்கம் அறிவிப்பு:
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருப்பதால் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த பணி நீக்கம் செயல்முறையானது நிறுவனங்களில் பொருளாதார சூழல் சரியில்லாத நிலையில் செலவுகளைக் குறைப்பதற்காக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 2023 ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு குறித்து டெல்லி அரசின் அறிக்கை – நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!
Follow our Instagram for more Latest Updates
ஏற்கனவே மெட்டா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக உலகளவில் 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். அதனை தொடர்ந்து அவர் 2023 ஆம் ஆண்டில் மேலும் ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டு வருகிறார். 2022 ஆம் ஆண்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட மெட்டா – 87000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
இது குறித்து மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், கோவிட் தொற்றின் தொடக்கத்தில், உலகம் வேகமாக ஆன்லைனில் நகர்ந்தது. தொற்றுநோய் முடிவுக்கு வந்த பிறகு, தொடரும் பொருளாதார முடக்கத்தைப் பலர் கணித்துள்ளனர். அதனால் நானும் ஆட்குறைப்பு செய்தேன். எங்கள் முதலீடுகளைக் கணிசமாக அதிகரிப்பதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.