மெட்டாவின் இந்திய நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம் – ஜன.1 முதல் பொறுப்பேற்பு!
மெட்டா நிறுவனம் சமீபத்தில் எடுத்திருந்த அதிரடியான பணி நீக்க நடவடிக்கைகளை அடுத்து இந்தியாவிற்கு புதிய தலைவரை நியமித்து உள்ளனர். இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய தலைவர்:
தொழில்நுட்ப நிறுவனத்தில் தற்போது மிகவும் சோதனையான காலமாக தான் உள்ளது. அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து வருகிறது. மெட்டா அந்த வரிசையில் முன்னணியில் உள்ளது. அதிரடியாக மெட்டாவை சேர்ந்த 11,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை தான் அதிகபட்ச எண்ணிக்கையாக தற்போது வரை உள்ளது.
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
மெட்டாவின் இந்த அதிரடி பாணி நீக்க நடவடிக்கைக்கு பிறகு இந்திய நிர்வாகத்தின் தலைவராக இருந்த அஜித் மோகன் பதவி விலகினார். இந்நிலையில், மெட்டா நிர்வாகத்தின் இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனவரி 1,2023 முதல் பொறுப்பேற்பார் என்றும் டீ தெரிவிக்கப்பட்டுள்ளது.