இந்திய ராணுவ நிறுவனத்தில் 502 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனம் (MES) ஆனது திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக புதிய அறிவிப்பு ஒன்றினை கடந்த மார்ச்சில் வெளியிட்டது. அதில் Draughtsman & Supervisor பணிகளுக்கு 502 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அப்பணிகளுக்கான விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MES வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- Diploma (Architectural Assistantship) மற்றும் UG / PG (Economics/ Commerce/ Statistics/ Business/ Public Administration) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஒன்று அல்லது இரண்டு வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
- General விண்ணப்பதாரிகள் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PWD விண்ணப்பதாரிகள் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அவகாசத்தினை வரும் 17.04.2021 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.