நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை – கேரள மாநிலத்தில் அமல்!

0
நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை - கேரள மாநிலத்தில் அமல்!
நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை - கேரள மாநிலத்தில் அமல்!
நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை – கேரள மாநிலத்தில் அமல்!

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு கேரள மாநிலத்தில் உள்ள பள்ளியில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை:

இந்தியாவில் பெண் குழந்தைளுக்கு சம உரிமையை அளிக்கும் நோக்கில் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், பாகுபாடு இவற்றை கலைப்பதற்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இனி போதை, மது அருந்தி வாகனங்கள் ஓட்டினால் உரிமம் ரத்து – கேரள அரசின் அதிரடி உத்தரவு!

இந்த தினத்தை முன்னிட்டு கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள லேபர் இந்தியா பப்ளிக் பள்ளியில் நாட்டிலேயே முதன் முறையாக மாதவிடாய் விடுமுறையை அறிவித்துள்ளது. மாதவிடாய் காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பெண் குழந்தை பருவமடைதல் மற்றும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கவும் அப்பள்ளி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!