தமிழகம் முழுவதும் நாளை (ஜூலை 10) மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – சுகாதாரத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் பேரில், தமிழகம் முழுவதும் 31-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நாளை நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பூசி முகாம்:
இந்தியாவில், கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தும் பணி, 2021-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில், 90%கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு விட்டதால், வாரந்தோறும் நடந்து வந்த மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது. வழக்கமான மையங்களில் மட்டும், தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருவதால், தமிழக அரசு தடுப்பு விதிமுறைகளை கையில் எடுத்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கோபியின் காதலி ராதிகா என்ற உண்மையை கூறும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – இன்றைய எபிசோடு!
அதன்படி, கடந்த மே 8ம் தேதி மற்றும் கடந்த ஜூன் 12ம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இந்நிலையில், 31-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நாளை (ஜூலை 10) நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31-வது சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இதுவரை 11.45 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். தற்போதைய நிலையில் 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்று கூறினார். இதையடுத்து முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.