IPL 2022: கொல்கத்தா அணி மெகா ஏலத்தில் குறிவைக்கும் 10 வீரர்கள்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
பெங்களுருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் 15 வது சீசனுக்கான IPL ஏலம் நடைபெற்றது. நேற்று மெகா ஏலத்தில் பங்கேற்கும் இறுதி பட்டியலை BCCI வெளியிட்டது. இந்நிலையில் இறுதி பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் முக்கியமான 14 வீரர்களை குறிவைத்துள்ளது.
IPL மெகா ஏலம்:
இந்த ஆண்டு IPL ஏலம் பிப்ரவரி 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலம் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த ஏலத்தில் கலந்து கொள்ள 1214 வீரர்கள் பெயர்களை பதிவு செய்தனர். 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களின் இறுதி பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, 590 வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த 590 வீரர்களின் 228 பேர் சர்வதேச வீரர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிராத 355 வீரர்களும் ஏலத்தில் இடம் பெற்று உள்ளனர். இந்த ஏலத்தில் 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? தனியார் பள்ளிகள் கோரிக்கை!
BCCI யின் விதிமுறைப்படி 2 புதிய அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணி முடிவடைந்த நிலையில் புதிதாக விளையாடும் அணிகளுக்கு யார் கேப்டனாக வழிநடத்துவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அகமதாபாத் அணிக்கு ஹர்த்திக் பாண்டியாவும் , லக்னோ அணிக்கு ராகுலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் சிறந்த 10 வீரர்களை குறிவைத்துள்ளது. இதற்கு முன் BCCI அறிவிப்பின் படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆண்ட்ரே ரசல் 12 கோடிக்கும், வெங்கடேஷ் ஐயர் 8 கோடிக்கும், வருண் சக்ரவர்த்தி 8 கோடிக்கும், சுனில் நரைன் 6 கோடிக்கும் தக்கவைப்புக்குப் பிறகு மெகா ஆடிஷனுக்காக KKR க்கு 48 கோடி பட்ஜெட் வைத்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான பார்களும் மூடல் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏலத்தில் கொல்கத்தா அணி தொடக்கவீரர்களாகிய அலெக்ஸ் ஹேல்ஸ், ஆகியோரை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறது. மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இடத்தை நிரப்ப ஐடன் மார்க்ரம்,பிரியம் கர்க், மற்றும் தீபக் ஹூடா,வனிந்து ஹசரங்க,ஹர்ஷல் படேல் ஆகியோரை குறிவைத்துள்ளது. இதனை தொடர்ந்து பந்து வீச்சாளர்களாகிய அவேஷ் கான்,ககிசோ ரபாடா,ஜோஷ் ஹேசில்வுட் மொத்தம் 3 பௌலர்களை ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.