தமிழகத்தில் இந்த அமைப்பின் கூட்டம், ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு – அரசு எச்சரிக்கை!

0
தமிழகத்தில் இந்த அமைப்பின் கூட்டம், ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு - அரசு எச்சரிக்கை!
தமிழகத்தில் இந்த அமைப்பின் கூட்டம், ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு - அரசு எச்சரிக்கை!
தமிழகத்தில் இந்த அமைப்பின் கூட்டம், ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு – அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை எதிர்த்து பல்வேறு அமைப்பினரும் குரல் கொடுத்து வரும் நிலையில், மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் கூட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

அரசின் அறிவிப்பு:

கோவை, ஈரோடு, சேலம், கன்னியாகுமரி மற்றும் மதுரை போன்ற மாநிலத்தின் முக்கிய மாவட்டங்களில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளின் மேல் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசு தீவிரமாக ஆராய்ந்து முடிவுகளை எடுத்து வருகிறது. குண்டு வீச்சு தொடர்பாக, பல இஸ்லாமிய அமைப்புகளில் சோதனைகளும் கைது நடவடிக்கைகளும் நடந்து வருகிறது. இதனால் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குண்டு வீச்சுக்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இதனால் தமிழகம் முழுவதும் மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்கப்பட்டு அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உயர்நீதிமன்றத்தில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி மனுவை பதிவு செய்தனர். அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்த விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

தமிழ் நாட்டில் நாளை (செப்.30) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – இப்போவே தெரிஞ்சுக்கிட்டு ரெடியா இருங்க!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தங்களது பதிலை அளித்துள்ளது. அதில், மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டுள்ளனர். மேலும், பல இடங்களிலும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தடையை எதிர்த்து இஸ்லாமிய இயக்கங்களும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களையும், கண்டணங்களையும் நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் முழு நேரமும் அயராது உழைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இது போன்ற நிலையில், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்பினரும் ஊர்வலம் மற்றும் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!