மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்வு – ஜூன் மாதம் கூட்டம்!
இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு கிடைக்கும் என பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
அகவிலைப்படி உயர்வு:
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DR குறித்த அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு ஊழியர்கள் (CGS) தலைமையிலான JCM தேசிய கவுன்சில் மற்றும் மத்திய நிதி அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் மத்திய அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக, மத்திய அரசு அதிகாரிகளுடனான இந்த பேச்சுவார்த்தை மே மாதம் 8 ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. நாடு முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக இந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது தேசிய கவுன்சில் அளித்துள்ள தகவலின் படி, இந்த கூட்டம் ஜூன் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SBI, PNB, BOB, கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்புகள்!
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மூன்று தவணையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததான DA உயர்வு, 2021 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் கொடுக்கப்படும் என மத்திய அரசு, ஏற்கனவே பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. அறிவிக்கப்பட்டபடி, ஜூலை முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் DR உயர்வு கொடுக்கப்பட்டால் 50 லட்சம் ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடிக்கணக்கான ஏழை மக்கள் வாழ்வாதாரம் இன்றி தத்தளித்துக்கொண்டிருக்கும் போது இதற்கு ஏன் இத்தனை அவசரம்.