சர்ச்சை நடிகை மீரா மிதுன் மீண்டும் அதிரடி கைது – காவலில் எடுக்க போலீசார் திட்டம்!
பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்குபவர் நடிகை மீரா மிதுன். இந்நிலையில் மற்றொரு வழக்கில் மீண்டும் மீரா மிதுன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டுள்ளனர்.
மீரா மிதுன் கைது:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் மீரா மிதுன். தன்னை ஒரு சூப்பர் மாடல் எனக்கூறி கொண்டதோடு மட்டுமல்லாமல் தனது திமிர் பேச்சு மற்றும் செயல்களினால் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்து வந்தார். அதனை தொடர்ந்து எதிர்மறையான புகழ் பரவி வந்த நிலையில் சூர்யா, விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்து ட்ரெண்டானர். இது போன்ற செயல்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தார்.
TNPSC அரசுப்பணி தேர்வுகளுக்கு தமிழ்வழி சான்று (PSTM) – போட்டியாளர்கள் அச்சம்!
இந்நிலையில் பட்டியலினத்தவர்கள் குறித்து தவறாக பேசியதாக துணை நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ”தன்னை யாரும் கைது செய்ய முடியாது” என அவர் பேசி போலீசாருக்கு தொடர்ந்து சவால் விடுத்து வந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
தற்போது சினிமாவில் நடிக்க நிறைய கால் ஷீட் கொடுத்துள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என மீரா மிதுன் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்நிலையில் மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை கூறி வருவதாக ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதன் அடிப்படையில் மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த புகாரின் அடிப்படையில் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.