ராதிகாவுடன் கோபி இருப்பதை பார்த்து ஷாக்கான மீனா – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
ராதிகாவை தான் கோபி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற விஷயம் எப்போது தான் வெளியே வரும் என எதிர்பார்த்த சமயத்தில் தற்போது ராதிகாவுடன் கோபி இருப்பதை பார்த்து மீனா அதிர்ச்சி அடைவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என ஆரம்பத்தில் இருந்தே கோபி அடம் பிடித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் குடும்பத்தினர்கள் தான் கட்டாயமாக கோபிக்கு திருமணம் செய்து வைத்தனர். தற்போது வரை பாக்கியாவை மனைவியாக கோபியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ராதிகாவைத் தான் கோபி ஆரம்பத்திலிருந்தே காதலித்து வந்திருக்கிறார்.
Exams Daily Mobile App Download
தற்போது பாக்கியாவை எப்படியாவது விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள பிளான் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், ராதிகாவிற்கு பாக்கியா தான் கோபியின் மனைவி என்பது தெரியாது. பொய் சொல்லிதான் ராதிகாவின் மனதிலும் கோபி இடம் பிடித்திருக்கிறார். தன்னை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டிருக்கும் பாக்கியாவை விவாகரத்து செய்ய தயாராகி கொண்டிருக்கிறார். அவ்வப்போது பாக்கியாவிடம் மாட்டுவது போல வந்து சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.
பள்ளிக்கு போக தயாராகும் ஐலா பாப்பா – பாடம் சொல்லி கொடுக்கும் ஆலியா! வைரலாகும் வீடியோ!
எப்படியும் ஒரு நாள் மாட்டிக்கொள்ள தான் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது கோபியின் மீதும் ராதிகாவிற்கு சந்தேகம் வரத் துவங்கி இருக்கிறது. பாக்கியா தான் கோபியின் மனைவி என்பது ராதிகாவிற்கு தெரிந்த பிறகு ராதிகா என்ன செய்யப் போகிறாரோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்கியலட்சுமி குடும்பத்துடன் இணைய இருக்கிறார்கள். அப்போது ராதிகாவுடன் கோபி இருப்பதை பார்த்து மீனா அதிர்ச்சியடைவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.