மீனா அப்பாவிடம் சண்டை போடும் முல்லை, குடும்பத்தில் வரும் அடுத்த சிக்கல் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் குடும்பத்துடன் தனத்தின் பிறந்தநாளுக்கு வந்து சந்தோசமாக இருக்கும் இந்த நேரத்தில் மீனாவின் அப்பா முல்லைக்கு பணம் வாங்கியது பற்றி கதிரை குறை சொல்ல அதனால் கோவப்பட்ட முல்லை சண்டைக்கு வர இருக்கிறார். அதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தின் பிறந்தநாளுக்காக முல்லையும் மீனாவும் சப்ரைஸ் செய்திருக்கின்றனர். அதனால் முல்லை குடும்பமும் மீனாவின் குடும்பமும் வந்திருக்கின்றனர். அனைவரும் ஐஸ்வர்யா மீனா சமைத்ததை சாப்பிட்டு சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மூர்த்தி கடன் வாங்கிய ஒருவர் வீட்டு வாசலில் வந்து சண்டை போடுகிறார். அவர் இப்பவே பணம் வேண்டும் என சொல்ல அதனால் ஜீவா மீனாவிடம் சென்று பணம் வாங்கி கொடுக்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்த விஷயம் தெரிந்து ஜனார்தனனிற்கு கோபம் வருகிறது. அதனால் அவர் மூர்த்தியிடம் சென்று கடன் வாங்கியது கதிருக்காக ஆனால் பணம் மட்டும் என் மகள் கொடுக்க வேண்டுமா என கேட்க மூர்த்தி இது நாங்க எல்லாரும் பொதுவாக வாங்கிய கடன் என சொல்கிறார். இவர் மனைவி ட்ரீட்மென்ட் பார்க்க தான வாங்கியது. இவரு மனைவிக்கு ட்ரீட்மென்ட் வேண்டும் என்றால் இவரே சம்பாதித்து தான் செலவு செய்ய வேண்டும் என ஜனார்த்தனன் பேச அதை கஸ்தூரி கேட்டு விடுகிறார்.
அவர், உள்ளே சென்று முல்லை மற்றும் அவருடைய அம்மாவிடம் ஜனார்த்தனன் பேசியது பற்றி சொல்ல அப்போது முல்லைக்கு பயங்கர கோபம் வருகிறது. முல்லை கோபமாக வெளியே செல்ல மீனாவின் அப்பா மேலும் சில வார்த்தைகளை விடுகிறார். அதை கேட்டு முல்லைக்கு கோவம் வர மீனாவின் அப்பாவிடம் சண்டைக்கு செல்கிறார். என்னுடைய கணவரை பற்றி சொல்ல நீங்க யார் என முல்லை கோவமாக பேசுகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.