கண்ணனை பற்றி பேசி சண்டை போடும் மீனா, வருத்தப்படும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனாவும் ஜீவாவும் கண்ணன் வேலை விஷயத்தை மறைத்ததை பேசி சண்டை போடுகின்றனர். மறுபக்கம் கண்ணனை நினைத்து மூர்த்தி வருத்தப்படுகிறார். பின் ஜீவாவும் மீனாவும் கதிரை பார்க்க செல்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா கயலை தூங்க வைக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அப்போது ஜீவா வந்து தூங்க வைக்க மீனா கால் வலியாக இருப்பதாக சொல்கிறார். ஜீவா கடையில் வேலைகளை செய்துவிட்டு வந்திருக்கிறேன் என சொல்ல, மீனா நானும் வீட்டில் எல்லா வேலைகளையும் பார்த்தேன் என சொல்கிறார். தனம் அக்கா கடைக்கு சென்றுவிடுகிறார். முல்லை வீட்டை விட்டு சென்று விட்டார் கடைசியில் எல்லா வேலைகளையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன் என மீனா சொல்ல, எல்லாரும் புத்திசாலித்தனமாக தான் இருக்காங்க கண்ணனை பார்த்தியா வேலை பற்றி சொல்லாமல் பணம் பற்றி மட்டும் சொல்கிறான் என சொல்கிறார்.
மீனா என்னிடம் ஏன் சொல்லாமல் போனான் என கேட்க ஜீவா அவங்க அப்படி இருந்தால் நாமளும் அப்படி இருக்க வேண்டாம் என சொல்ல ஆனால் மீனா கண்ணன் ஐஸ்வர்யா சொல்வதை கேட்கிறான் ஆனால் நீ ஏன் நான் சொல்வதை கேட்கவில்லை என கேட்க ஜீவா எதுவும் பேசாமல் படுக்க சொல்கிறார். பின் தனம் பாண்டியனை சமாதானம் செய்து தூங்க வைக்கிறார். ஒரு நாள் முழுவதும் அவனை பார்க்காமல் கஷ்டமாக இருந்ததாக தனம் சொல்ல மூர்த்தி நான் சும்மா தான இருக்கேன் கடையில் இது போல உட்கார்ந்து இருக்க கூடாத என கேட்கிறார்.
பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 20 முதல் விடுமுறை அறிவிப்பு – முக்கிய தகவல் வெளியீடு!
தனம் அதெல்லாம் வேண்டாம் என சொல்ல, கதிர் போனதால் இப்படி ஆகிவிட்டது இது நிரந்தரம் இல்லையே என சொல்ல, காலம் போக போக வயசு போகுது என மூர்த்தி சொல்கிறார். பின் தனம் கதிரும் முல்லையும் வந்துருவாங்க என சொல்ல, அவங்க வந்தாலும் கண்ணன் கிளம்பி சென்றுவிடுவான் என போல என சொல்கிறார். ஏன் அப்படி சொல்றீங்க என கேட்க, வேலை கிடைத்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை என கேட்கிறார். வேண்டும் என்றே சொல்லாமல் இல்லை என தனம் சொல்ல, ஆனால் இத்தனை நாள் அப்படி இல்லை என மூர்த்தி கேட்கிறார். கண்ணன் அப்படி எல்லாம் இல்லை என தனம் சொல்ல, அவன் நல்ல வேலைக்கு போனால் சந்தோசம் என தனம் சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
மறுபக்கம் கதிர் முல்லை பேசிக் கொண்டிருக்க நீங்க காலை வேலைக்கு சென்றுவிட்டு இரவு லேட்டா தான் வீட்டிற்கு வரீங்க எனக்கு தனியாக இருக்க வருத்தமாக இருக்கிறது என சொல்ல, கதிர் வேலைக்கு சேர்ந்த உடனே லீவு போட முடியாது என சொல்கிறார். முல்லை அதுவும் சரி தான் என சொல்ல, அந்த பக்கமாக ஜீவாவும் மீனாவும் வருகின்றனர். ஜீவா இங்கே தான் கதிர் வீடு இருப்பதாக சொல்ல, மீனா அவங்க வீட்டிற்கு நாம போக வேண்டாம் என சொல்கிறார். ஏன் என ஜீவா கேட்க அண்ணன் அண்ணி போகவில்லை நாம போக கூடாது என மீனா சொல்கிறார். ஆனால் ஜீவா மீனாவை அழைத்து கொண்டு வருகிறார். பின் முல்லை கதிர் அவர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு வர சொல்கிறார். மீனா நான் வரவில்லை நீங்க தான வீட்டை விட்டு போனீங்க என்பது போல பேசுகிறார்.