ஜனார்த்தன் கடையை பார்த்து கொள்ள களமிறக்கும் மீனா? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ட்விஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்தடுத்து ட்விஸ்ட்கள் காணப்படுகின்றன. தற்போது மூர்த்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தொடர் மிகவும் முக்கியமான கட்டத்தில் நகர உள்ளது. இந்த எபிசோடை காண ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பொறுத்தவரையில் 4 அண்ணன் – தம்பிகளை சுற்றி தான் மொத்த கதையுமே. இத்தனை நாட்களாக இந்த குடும்பம் எவ்வளவோ பிரச்சனையை சந்தித்து இருக்கிறது. ஆனால் ஒருபோதும் பிரிந்தது இல்லை. இருப்பினும் தனத்தின் பிறந்த நாள் அன்று, மீனா அப்பாவால் வந்த சண்டையால் முல்லையும் கதிரும் வீட்டை விட்டு சென்றுவிட்டனர். இதனால் அன்று இரவே மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. தூக்கத்தில் கத்திய அவரை உடனடியாக ஆஸ்பிட்டல் அழைத்து வந்தனர். பின்பு நெஞ்சு வலி என்று ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்துள்ளனர். 2 ஆப்ரேஷன் கட்டாயம் செய்ய வேண்டும் என டாக்டர் கூறிவிட்டார்.
Exams Daily Mobile App Download
தனம் ஆஸ்பிட்டலில் இருந்தப்படியே அழுது துடிக்கிறார். அவருக்கு ஆறுதலாக ஜீவாவும் கண்ணனும் உடன் இருக்கிறார்கள். மேலும் மூர்த்தியைப் பார்க்க வந்த கதிரிடம் தனம் வீட்டுக்கு வரும்படி கெஞ்சுகின்றார். ஆனால் கதிரோ, நான் கடனை காட்டாமல் வீட்டுக்கு வரமாட்டேன் என மறுத்து விடுகிறார். இதனால் கோபம் அடைந்த, தனம் கதிரை, ஹாஸ்ப்பிடலை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார். இந்நிலையில், இப்போது மூர்த்தியின் மோசமான நிலைமைக்கு கதிரும் முல்லையும் ஒரு காரணம் ஆகிவிட்டனர். மேலும் தற்போது மூர்த்தியின் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், 2 மாதங்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என டாக்டர் கூறிவிட்டார்.
எப்போதும் பிரியாமல் இருந்த அண்ணன் தம்பிகள் தற்போது பிரிந்து உள்ளனர். இதனால் குடும்பமே அதிக மனவேதனையில் உள்ளது. இந்நிலையில் சீரியலின் கதை அடுத்து எப்படி நகரும், கதிர் பிரிந்த இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஜீவாவையும் குடும்பத்தில் இருந்து பிரிக்க மீனாவின் அப்பா, தன் கடையை பார்த்து கொள்ள ஜீவா வர வேண்டும் என ஏதாவது திட்டம் தீட்டுவாரா. இல்லை, மீனா தன் அப்பாவிற்கு உதவி செய்ய வேண்டும் என்று கடையை நான் பார்த்து கொள்கிறேன் என்று ஜனார்தனுக்கு ட்விஸ்ட் கொடுப்பாரா ? எந்த நோக்கில் சீரியல் நகர உள்ளது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.