தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம் – ஸ்விட்சர்லாந்தில் பேச அமைச்சருக்கு அழைப்பு!
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம் செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்திட்டம் குறித்து விளக்கம் அளிக்க தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு உலக பொருளாதார மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
மருத்துவ திட்டம்:
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதனை தொடர்ந்து மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் மக்களை தேடி மருத்துவம்.
Follow our Instagram for more Latest Updates
இந்தத் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் அவர்களின் வீட்டிற்கே சென்று மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. கடந்த வருடங்களில் நிலவிய கொரோனா பேரிடர் காலத்தில் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று மாத்திரைகளை வாங்குவதில் சிக்கலை எதிர்கொண்டனர். இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் வீடு தேடி மாத்திரைகள் வழங்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!
Exams Daily Mobile App Download
தற்போது இத்திட்டம் தமிழகத்திற்கு மட்டுமல்ல பிற மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருந்து வருகிறது. இது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மக்களை தேடி மருத்துவம் திட்டம் உலகத்திற்கே வழிகாட்டியாக உள்ளது. தற்போது ஸ்விட்சர்லாந்தில் உலக பொருளாதார மன்றம் நடைபெற உள்ளது. அதில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து விளக்க என்னை அழைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த மத்திய சுகாதார அமைச்சர் தமிழகத்தை பாராட்டி வருவதாகவும் கூறி அவர் மகிழ்ச்சி அடைந்தார்.