தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தினால் பல்வேறு குடும்பங்கள் பயன்பெற்று உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
அமைச்சர் பேட்டி:
2021 ஆம் ஆண்டு பதவியேற்ற தி.மு.க அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் காப்பீட்டு திட்டத்தினால் பல்வேறு குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். தற்போது இந்த திட்டத்தின் கீழ் 1.37 கோடி குடும்பங்கள் பயன் பெற்று உள்ளதாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – ஷாக் ரிப்போர்ட்!
மேலும் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட 31,145 பேருக்கு 382.05 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து இக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 32,23,064 பேருக்கு ரூ.182. 64 கோடி செலவில் RT-PCR பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். சமீபத்தில் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட 2,049 பேருக்கு தி.மு.க அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் 5.83 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
பள்ளிகளுக்கு 3 நாட்கள் பொங்கல் விடுமுறை – அரசு அறிவிப்பு!
கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பேற்ற முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் அண்மையில் கூறியபடி காப்பீடு திட்டத்தில் இணைந்தவர்களுக்கு வருடந்தோறும் ரூ.5 லட்சம் மருத்துவ பயன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இணையாமல் இருப்போர் தங்களது ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம். மேலும் புதிதாக சேரும் குடும்பத்தினருக்கும் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ மற்றும் கல்வி சலுகைகளும் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.