தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மருத்துவ காப்பீடு நீட்டிப்பு!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டமானது 2025 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
காப்பீட்டு திட்டம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு மருத்துவ காப்பீட்டு திட்டமானது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மேற்கொள்ளும் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் வரையிலும் பணம் கொடுக்கப்படுகிறது. இந்த காப்பீட்டு திட்டமானது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை 2025 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதாக நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து!
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘அரசு ஊழியர்களின் மருத்துவ காப்பீட்டு திட்டம் கடந்த ஜுன் மாதத்துடன் நிறைவடைந்தது. இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு ஒப்பந்த புள்ளிகளை கோரியதின் அடிப்படையில், யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும். மேலும் இத்திட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒருவர் மருத்துவ சிகிச்சைகளுக்காக ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு கீழ் பெற்று பயனடையலாம்.
TN Job “FB Group” Join Now
மேலும் வரையறுக்கப்பட்ட சில சிகிச்சைகளுக்காக ரூ.10 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம். இந்த காப்பீட்டு திட்டமானது அரசு ஊழியர்களின் பெற்றோர்களுக்கும் பொருந்தக்கூடியது. அந்த வகையில் கண்புரை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள ஒரு கண்ணுக்கு ரூ.30 ஆயிரமும், கர்ப்பப்பை சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள 203 அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.