வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்!
பெங்களூருவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக வீட்டிலிருந்து பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு க்ரோனிக் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் சில வலியுறுத்தல்களை வெளியிட்டு உள்ளனர்.
க்ரோனிக் முதுகு வலி:
இந்தியாவில் கடந்த வருட மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கியது. அதன் பிறகு தொற்று குறையாத காரணத்தாலும், கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியதாலும் ஊழியர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டு தற்போது ஓராண்டுக்கும் மேலாக வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இதனால் அவர்கள் கடுமையான உடல் உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
YouTube மூலம் மாதம் 4 லட்ச ரூபாய் வருமானம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரை!
முக்கியமாக ஐடி துறையில் பணிபுரிபவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் கொரோனா பரவ தொடங்கியது முதல் வீட்டிலிருந்து பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்டோர், 45 சதவீத மக்கள் க்ரோனிக் முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் முதுகு வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் 20% இளைஞர்கள் க்ரோனிக் முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முதுகு வலி அதிகம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அக்.1 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!
வீட்டிலிருந்து பணி புரிபவர்கள் வேலை செய்யும் போது சரியான நிலையில் அமர்ந்து செயல்பட வேண்டும். தினந்தோறும் தவறாது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவு, பழக்க வழக்கங்களையும் அவ்வப்போது மாற்றிக் கொள்ள வேண்டும். புதிய நடைமுறைகளை ஏற்ப வேலை செய்யும் வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.