மாநிலங்களுக்கு இடையிலான பயணத்திற்கு ‘இது’ தேவையில்லை – மருத்துவ கவுன்சில் அறிவிப்பு!!
தற்போதைய கொரோனா மருத்துவ பணிகளினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் மாநிலங்களுக்கு இடையிலான பயணத்திற்கு புதிய அறிவுறுத்தல்களை இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவ பரிசோதனை:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் தீவிர கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகிறது. பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு பல இடங்களில் பலத்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. நாடு முழுவதும் 2,506 சோதனை ஆய்வகங்கள் உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அவை அனைத்தும் 24 மணி நேரமும், 3 ஷிப்ட்களாக இயங்கி வருகின்றது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? அரசு ஆலோசனை!!
ஒரு நாளில் மட்டும் தேசிய சோதனை திறன் 15 லட்சங்களை தொட்டு விட்டது. அதிக அளவிலான பாதிப்புகள் காரணமாக, அதிக சோதனைகள் மேற்கொள்வதாலும், பணியாளர்களும் தொற்றினால் பாதிக்கப்படுவதால் சோதனை இலக்கை அடைய முடிவதில்லை. இதனால் இந்திய மருத்துவ கவுன்சில் புதிய அறிவுறுத்தல்களை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களுக்குள் வரும் பயணிகளுக்கு ஆர்.டி., – பி.சி.ஆர். சோதனையில் நெகட்டிவ் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
ஆரோக்கியமான நபர்களுக்கு சோதனை அவசியம் இல்லை என்று கூறியுள்ளது. இதனால் சோதனை மையங்களின் சுமை குறைக்கப்படும். ஒரு முறை சோதனையில் பாசிட்டிவ் என்று வந்த நபர்களுக்கு மீண்டும் சோதனை செய்யக் கூடாது. அதிகப்படியான சோதனைகளுக்காக மாநில அரசுகள் ஆர்.ஏ.டி. சோதனைகளை செய்யலாம் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்