ஆகஸ்ட் 1 வரை 10 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதி!

0
ஆகஸ்ட் 1 வரை 10 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு - மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதி!
ஆகஸ்ட் 1 வரை 10 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு - மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதி!
ஆகஸ்ட் 1 வரை 10 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதி!

ஒடிசா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருத்துவ கல்லூரிகள், நர்சிங், பார்மசி மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மீண்டுமாக திறக்க முடிவு செய்துள்ள அரசு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கை நீட்டித்துள்ளது.

கல்லூரிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பாதிப்புகள் குறைந்து வருவதையடுத்து பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் மருத்துவ கல்லூரிகள், நர்சிங், பார்மசி, பிசியோதெரபி மற்றும் தொழில்சார் சிகிச்சை, பொது சுகாதாரம் மற்றும் பிற துணை மருத்துவ படிப்புகளுக்கான கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த கல்லூரிகளில் கொரோனா வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை? உயர் நீதிமன்றம் உத்தரவு!

இதற்கிடையில் ஒடிசா மாநிலத்தில் ஏறத்தாழ 10 மாவட்டங்களில் மட்டும் பகுதி நேர ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 1 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின் கீழ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது. அதன் படி வகை A ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் வகை B ன் கீழ் உள்ள 10 மாவட்டங்களில் வார இறுதி பணிநிறுத்தம் அமலில் இருக்கும்.

TN Job “FB  Group” Join Now

இந்த கோர்தா, பூரி, நாயகர், கட்டாக், கேந்திரபாரா, ஜகத்சிங்க்பூர், ஜஜ்பூர், பாலசோர், பத்ரக் மற்றும் மயூர்பஞ்ச் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பொது பூங்காக்கள், வணிக வளாகங்கள், சினிமா அரங்குகள் மற்றும் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒடிசா மாநிலத்தில் நேற்று (ஜூலை 28) ஒரு நாளில் 1,703 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 69 புதிய இறப்புகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இருப்பினும் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 2.59% லிருந்து 2.16 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!