மருத்துவம் & பொறியியல் படிப்புகள் இந்தியில் கற்பிக்கப்படும் – முதல்வரின் அதிரடி நடவடிக்கை!
நாட்டில் பல மாநிலங்களில் சமீபத்தில் கல்வி கற்பிக்கப்படும் மொழி குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் இனி மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தியில் கற்பிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
மருத்துவம் & பொறியியல் படிப்புகள்:
தேசிய கல்வி கொள்கை 2020ம் படி நாடு முழுவதும் கற்பித்தல் பணிகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்று மத்திய அரசு அனைத்து கல்வி வாரியங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது. மேலும், நடப்பு கல்வி ஆண்டு முதலே அனைத்து மாநிலங்களும் தேசிய கல்வி கொள்கையின் படி தான் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்தி பேசும் மாநிலங்களான மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் இந்தியை உயர்கல்விக்கான மொழியாக பரிந்துரைத்துள்ளது. இதேபோல், தமிழ்நாடு போன்ற இந்தி பேசாத மாநிலங்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அந்தந்த தாய்மொழியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள கூறியுள்ளது. இந்த அறிவிப்பிற்கு பின்னர், மத்தியபிரதேச முதல்வர் இந்தியில் மருத்துவ படிப்பிற்கான புத்தகங்களை அறிமுகம் செய்தார்.
தீபாவளி பரிசு: பிரதமரால் 75,000 பேருக்கு பணி நியமனம் – கொண்டாட்டத்தில் இளைஞர்கள்!!
Exams Daily Mobile App Download
மேலும், மாநிலத்தில் ஆறு பொறியியல் மற்றும் பல பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் இந்தியில் கல்வி கற்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து புதுசேரியில் தமிழ் மொழியில் மருத்துவ படிப்பு கற்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், உத்தரபிரதேசத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்க ஏற்பாடுகள் தொடங்கப்படும் என்று தற்போது அறிவித்துள்ளார்.