இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை – மாதம் ரூ.2,90,000 ஊதியம்..!
மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (MECL) ஆனது சமீபத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Director பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
MECL வேலைவாய்ப்பு விவரங்கள்:
மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் வெளியிட்ட அறிவிப்பில் Director பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Mining / Mechanical Engineering பாடப்பிரிவில் இன்ஜினியரிங் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும் அல்லது அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Geology / Applied Geology / Geophysics பாடப்பிரிவில் Post Graduate டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசில் Director அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். senior level of management in Mining / Drilling / Exploration projects / Contract & Construction ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். 01.04.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் குறைந்தது ரூ.1,60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,90,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே இப்பணிக்கு என்று அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுக்குள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து (30.06.2022) நாளைக்குள் சமர்ப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.