நாட்டில் கண் நோயை தொடர்ந்து வேகமெடுக்கும் தட்டம்மை பாதிப்பு – அச்சத்தில் மக்கள்!
இந்தியாவின் சில மாநிலங்களில் குழந்தைகளிடையே தற்போது தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மத்திய அரசானது நோய் பாதிப்பை கண்டறிய முக்கிய குழுக்களை அமைத்துள்ளது .
தட்டம்மை பாதிப்பு:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு பெருந்தொற்றாக உருவெடுத்து மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே கொரோனா ஓரளவுக்குள் கட்டுக்குள் வந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்ததனர். ஆனால் கடந்த சில நாட்களாக குழந்தைகள் உள்பட அனைவருக்கும் கண் நோய் பரவி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நோய் காற்றில் பரவும் தன்மை கொண்டதால் சுகாதாரத்துறை கண் நோய் பாதித்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோரிடம் கேட்டு கொண்டது. இந்த நிலையில் குழந்தைகளிடையே தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தட்டம்மை பாதிப்பு குஜராத், ஜார்கண்ட், கேரளா போன்ற மாநிலங்களில் தற்போது அதிகம் பரவி வருகிறது.
போதை பொருள் விற்பனை செய்தால் மரண தண்டனை – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!!
Exams Daily Mobile App Download
மேலும் இந்த நோய் பாதிப்பு பரவாமல் தடுக்க மத்திய அரசானது உயர்மட்ட குழுக்களை அமைத்துள்ளது. இந்த குழுக்கள் நோய் பாதிப்பு பரவும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். மேலும் மாநில சுகாதாரத்துறையினருடன் இணைந்து இந்த மத்திய குழுக்கள் நோயின் தீவிரம், பரவல் வேகம் போன்றவற்றை ஆராய்ந்து தட்டம்மை பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.