தமிழகத்தில் அக்டோபர் 11 முதல் MBBS, BDS மருத்துவ கலந்தாய்வு – நவம்பர் 15 முதல் வகுப்புகள் தொடக்கம்!
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேருவதற்கான மருத்துவ கலந்தாய்வு வரும் 11 ஆம் தேதி (AIQ) முதல் தொடங்க உள்ளதாக மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.
மருத்துவ கலந்தாய்வு:
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 03.10.2022 என அறிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். பதிவு செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். இதற்கு https://ugreg22.
தமிழகத்தில் 2,748 அரசு பணிகளுக்கான வாய்ப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Exams Daily Mobile App Download
அக்.11-ஆம் தேதி (AIQ இடங்களுக்கு) மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அக்.17 முதல் 28-ஆம் தேதிக்குள் மாநிலங்களில் முதற்கட்ட கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் எனவும் மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மருத்துவ கல்வி மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 15 முதல் தொடங்குகிறது என்றும் மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்