10 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.21,000/ – ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் 11 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.01.2022 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | மயிலாடுதுறை இளைஞர் நீதி குழுமம் |
பணியின் பெயர் | பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த மற்றும் நிறுவனம் சாரா),சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், ஆற்றுப்படுத்துநர், சமூக பணியாளர், கணக்காளர்,தகவல் பகுப்பாளர் (Data Analyst) |
பணியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
- பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த மற்றும் நிறுவனம் சாரா) – 2
- சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் – 1
- ஆற்றுப்படுத்துநர் – 1
- சமூக பணியாளர் – 1
- கணக்காளர் – 1
- தகவல் பகுப்பாளர் (Data Analyst) – 1
- உதவியாளர் (ம) கணினி இயக்குபவர் – 1
- புறத்தொடர்பு பணியாளர் -1
TN Job “FB
Group” Join Now
வயது வரம்பு :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 62 வயதிற்கு மிகாமல் இருக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு பணிக்கான கல்வி தகுதி:
பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த மற்றும் நிறுவனம் சாரா):
- இளங்கலை/முதுகலை பட்டம் (10+2+3 Pattern) சமூகவியல், சமூகபணி, உளவியல், குழந்தை வளர்ச்சி, குற்றவியல் மற்றும் கல்வியியல் ஆகியவற்றில் பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- குழந்தைகள் நலன்/சமூக நலன்/ கல்வி/ தொழிலாளர் ஆகியவற்றில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்:
- B.L / L.L.B (Regular)
- குழந்தைகள் நலன்/சமூக நலன்/ கல்வி/ தொழிலாளர் ஆகியவற்றில்1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆற்றுப்படுத்துநர்:
- இளங்கலை/முதுகலை பட்டம் (10+2+3 Pattern) சமூகபணி, உளவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் (Guidance and Counseling – Medical & Psychiatric) ஆகியவற்றில் பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- ஆற்றுப்படுத்துதல் பணியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சமூக பணியாளர் :
- இளங்கலை/முதுகலை பட்டம் (10+2+3 Pattern) சமூகபணி, உளவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் (Guidance and Counseling – Medical & Psychiatric) ஆகியவற்றில் பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- குழந்தை தொடர்பான கள பணியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
கணக்காளர் :
- B.Com / M.Com (10+2+3) Pattern
- கணக்காளர் பணியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தகவல் பகுப்பாளர் (Data Analyst):
- B.A / BCA / B.Sc (CS / Statistics / Mathematics) (10+2+3 Pattern)
- தகவல் தொகுப்பாளர் பணியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் (ம) கணினி இயக்குபவர்:
10th / SSLC தேர்ச்சி அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும் கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
புறத்தொடர்பு பணியாளர்:
தேர்ச்சி குழந்தை நலன் சார்ந்த சான்றிதழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் குழந்தை நலன் தொடர்பான கள பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அரசு பணிக்கான சம்பள விவரம் :
- பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த மற்றும் நிறுவனம் சாரா) – ரூ.21,000/-
- சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் – ரூ.21,000/-
- ஆற்றுப்படுத்துநர் – ரூ.14,000/-
- சமூக பணியாளர் – ரூ.14,000/-
- கணக்காளர் – ரூ.14,000/-
- தகவல் பகுப்பாளர் (Data Analyst) – ரூ.14,000/-
- உதவியாளர் (ம) கணினி இயக்குபவர் – ரூ.10,000/-
- புறத்தொடர்பு பணியாளர் – ரூ.8,000/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான அமைந்த விண்ணப்ப படிவத்தை நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட இணையதளத்திலிருந்து (https://mayiladuthurai.nic.in/) பதிவிறக்கம் செய்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவல மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை கம், மயிலாடுதுறை மயிலாடுதுறை- 609001 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31 – ஜனவரி – 2022 (31.01.2022)-ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமணம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.