மே 1 நடப்பு நிகழ்வுகள்
மே 1 – சர்வதேச தொழிலாளர் தினம்
மே 1 – மகாராஷ்டிர & குஜராத் மாநில தினம்
மே 1 – உலக ஆஸ்துமா தினம்
- ஆண்டுதோறும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- ஆஸ்துமா நோய் ஒவ்வாமையால் வருகிறது.
- மரபணு பிரச்சினையால் பரம்பரையாகவும், மாசுகள், தொழிற்சாலை கழிவுகள், விறகு அடுப்புகள் பயன்படுத்துதல் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டுவதாலும் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுகிறது.
மாநிலம்
தமிழ்நாடு
88-வது ஆண்டு உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் நினைவு நாள்
- உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் 88-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று நடைபெற்றது.
- 1930 ஏப்ரல் 30-ம் தேதி ஆங்கிலேயருக்கு எதிரான உப்பு சத்தியாகிரகப் போராட்டம் ராஜாஜி தலைமையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்றது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநில விமானப் போக்குவரத்தை சிந்துதுர்க் விமான நிலையம் ஊக்குவிக்கும்.
- மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு சிந்துதுர்க் மாவட்டம் பாருலேசிபி என்னும் இடத்தில் புதிய விமான நிலையம் தொடங்கப்பட உள்ளது.
ஜம்மு-காஷ்மீர்
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத் துணை முதல்வராகிறார் சபாநாயகர் கவீந்தர் குப்தா.
தேசியசெய்திகள்
2018 ஏப்ரல் மாதத்தின் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டியது
- ஏப்ரல் மாதத்தில், மத்திய, மாநில அரசுகள் ஈட்டியுள்ள மொத்த வருவாய் முறையே மத்திய ஜி.எஸ்.டி. மூலம் ரூ. 32,493 கோடி மற்றும் மாநில ஜி.எஸ்.டி. மூலம் ரூ. 40,257 கோடி ஆகும்.
ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான வருகையாளர் விருதுகளை குடியரசுத்தலைவர் நாளை வழங்குகிறார்
- அடிப்படை மற்றும் செயல்முறை அறிவியல், மனிதநேயம், கலை, சமூக அறிவியல், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான துறைகளில் ஆராய்ச்சிக்கான வருகையாளர் விருதுகளை குடியரசுத்தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் 02.05.2018 வழங்குகிறார்.
இந்தியா வந்தார் செர்பிய துணை பிரதமர் – 4 நாட்கள் சுற்றுப்பயணம்
- செர்பிய குடியரசு நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவுத் துறை மந்திரியுமான இவிகா டேசிக் இந்தியாவில் 4 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர் – மும்பை சிறுவன் சாதனை
- மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அயான் கபாடியா என்ற 9 வயது சிறுவன் மிகச்சிறிய வயதில் புத்தகம் எழுதி இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியராக சாதனைப் படைத்துள்ளான்.
சர்வதேச செய்திகள்
புதுதில்லியில் இந்தியா ஜப்பான் இடையிலான 9 –வது எரிசக்திப் பேச்சுவார்த்தை
- பொருளாதார வளர்ச்சிக்கு, நம்பகமான, தூய்மையான, குறைந்த செலவில் உற்பத்திச் செய்யப்படும் எரிசக்தி மிகவும் அத்தியாவசியமானது என்று இந்தியாவும் ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளன.
- புதுதில்லியில் 01.05.2018 நடைபெற்ற இந்தியா ஜப்பான் இடையிலான 9 –வது எரிசக்திப் பேச்சுவார்த்தைத் தொடர்பான கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பாதுகாப்பான, எளிதில் அணுகக் கூடிய எரிசக்தி வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகத் திகழும் ஜப்பானும், ஏழாவது பொருளாதார நாடாக விளங்கும் இந்தியாவும் இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புதல் தெரிவித்தனர்.
ஜப்பான், சீனா, தென்கொரியா உச்சி மாநாடு – 9-ம் தேதி டோக்கியோவில் நடைபெறுகிறது
- இந்த ஆண்டின் உச்சி மாநாடு மே 9-ம் தேதி டோக்கியோ நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இந்த மாநாடு தற்போது நான்காவது முறையாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத்தில் அதிநவீன சர்வதேச விமான நிலையம் – பாகிஸ்தான் பிரதமர் திறந்து வைத்தார்
- ஒய் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமானநிலையம் பாகிஸ்தானின் சர்வதேச விமானங்களில் மிகப்பெரியதாக இருக்கும்.
வணிகசெய்திகள்
இன்ஜினீயரிங் ஏற்றுமதி 17 சதவீதம் உயர்வு
- அமெரிக்காவுக்கான இந்தியாவின் இன்ஜினீயரிங் ஏற்றுமதி 2017-18-ம் நிதி ஆண்டில் 17 சதவீதம் அதிகரித்து 7,600 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
- இந்தியாவின் ஏற்றுமதி வருமானத்தில் இன்ஜினீயரிங் ஏற்றுமதியின் பங்களிப்பு 25 சதவீத அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுசெய்திகள்
ஹாக்கி
- இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளரானார் ஹரேந்திர சிங்; மகளிர் அணியின் பயிற்சியாளராக மரிஜென் மறுநியமனம்.
கால்பந்து
- கால்பந்து எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் எகிப்து நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் முகமது சாலா.
கிரிக்கெட்
- ஐசிசி டெஸ்ட் தரவரிசை- இந்தியா 125 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடம்.
துப்பாக்கி சுடுதல்
- உலகத் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார் துப்பாக்கி சுடுதல் வீரர் ஷாஜர் ரிஸ்வி
நியமனம்
- சிதான்ஷு ரஞ்சன் கர் – பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர்