தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் – அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத கோடை விடுமுறைக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மே மாத ஊதியம் :
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓவியம், தையல், நடனம், கணினி, கைவினை பொருட்கள் போன்ற கலைகளை கற்பிக்க ஆசிரியர்களை நியமித்துள்ளனர். இவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் பகுதி நேரமாக கற்பித்தல் பணியை மேற்கொள்கின்றனர். இவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 2012ம் ஆண்டு தமிழகம் முழுவதும் 16,546 பகுதி நேர ஆசிரியர்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நியமித்தார். இவர்களுக்கு மாதம் தோறும் அரசு நிணயித்த ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மே மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். மாணவர்களுக்கு வகுப்புகள் கிடையாது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு – முழு ஊரடங்கு எதிரொலி!!
அதனால் இந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது. பலமுறை கோரிக்கை வைத்தும் 10 ஆண்டுகளுக்கு மேல் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது . இதை எதிர்பார்த்து தமிழகத்தில் 12,000 ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது கொரோனா பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
இதனால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தங்கள் வீடுகளுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் குறித்து கல்வித்துறை அதிகாரியிடம் தெரிவித்தோம். அவர் பேட்டி ஒன்றில் ஆசிரியர்களுக்கு கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். எனவே நாங்கள் அதை எண்ணி காத்துக் கொண்டிருக்கிறோம் என தமிழக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் கூறியுள்ளார்.
தொகுப்பூதிய அடிப்படையில் உள்ள நூலகர் மற்றும் ஆசிரியர் அவர்களுக்கும்
மே மாதம் Salary வழங்கிட நீங்களும் இந்த Point Ah சேர்த்துக்கொள்ளுங்கள்..உதவியாக இருக்கும்