தமிழகத்தில் நாளை (மே 5) கடைகள் அடைப்பு – வணிகர்கள் தினம் கொண்டாட்டம்!

0
தமிழகத்தில் நாளை (மே 5) கடைகள் அடைப்பு - வணிகர்கள் தினம் கொண்டாட்டம்!
தமிழகத்தில் நாளை (மே 5) கடைகள் அடைப்பு - வணிகர்கள் தினம் கொண்டாட்டம்!
தமிழகத்தில் நாளை (மே 5) கடைகள் அடைப்பு – வணிகர்கள் தினம் கொண்டாட்டம்!

தமிழகத்தில் நாளை வணிகர் தினத்தையொட்டி நாளை பகல் 12 மணி வரை உணவகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகர்கள் தினம்:

ஒவ்வொரு ஆண்டும் மே 5 ஆம் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. வணிகர் தினத்தன்று வழக்கமாக கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்படுகின்றன. இந்த ஆண்டு வணிகர் தினம் மே 5 ம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வணிகர் சங்கமும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி மாநாடு நடத்துகின்றனர். இந்த மாநாட்டில் வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள், அதை களைவதற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் என்ன உதவி வேண்டும் என்பது பற்றியும் கோரிக்கை வைக்கின்றனர். இதற்காக வியாபாரிகள் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டுக்கு செல்கின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை , பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!

இது தொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்க செயலாளர் ஆர்.ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் அதன் தொடர்ச்சியாக வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றவும் வணிக சகோதரத்தை நிலை நாட்டவும் மே 5-ந்தேதி வணிகர் தினத்தன்று ஓட்டல்களுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று உணவகங்களுக்கு நாளை காலை ஒருவேளை விடுமுறை அளித்து வணிக ஒற்றுமையை உணர்த்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

எனவே நாளை பகல் 12 மணி வரை உணவகங்கள் இயங்காது. இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் மாநாட்டுக்கு செல்லும் வியாபாரிகளின் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். பழைய பொருள் வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு நாளை விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சியில் நடத்தும் வணிகர் தின மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அந்த மாநாட்டில் கோயம்பேடு வியாபாரிகள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் கோயம்பேடு மார்க்கெட் மேம்பாட்டு பணிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!