தமிழகம் முழுவதும் நாளை (மே 5ம் தேதி) கடைகளுக்கு விடுமுறை – பேரவை தலைவர் அறிவிப்பு!
தமிழகத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு மே 5 ம் தேதி காலை நேரம் மட்டும் சென்னையில் அனைத்து உணவகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று சென்னை உணவகங்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
விடுமுறை:
தமிழகத்தில் அனைத்து துறை வணிகர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் இவர்களுக்கென சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வணிகர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (மே 5) வணிகர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை சென்னையில் உள்ள உணவகங்களுக்கு காலை ஒரு வேளை மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று சென்னை உணவகங்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!
இது குறித்து சென்னை உணவகங்கள் சங்கம் சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில் சென்னை உணவகங்கள் சங்கத்தின் 2022-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 11 ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர், மே 5ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு அழைத்து, இந்த மாநாட்டில் முதல்வர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகர்களின் ஒற்றுமையை வெளிக்கொணரும் வகையிலும், வணிக சகோதரத்துவத்தை நிலை நாட்டவும் மாநாடு நடத்த இருக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும் வணிகர்களின் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் விடுமுறை அளித்திட கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று காலை ஒரு வேளை விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை கலை நேரம் உணவகங்களுக்கு விடுமுறையாகும். நாளை நடைபெற உள்ள வணிகர் சங்க மாநில மாநாடு நடைபெறவுள்ளதை அடுத்து ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வெற்றி மாநாடாக சிறப்பித்திட தங்களின் அன்பான ஒத்துழைப்பை அளித்திட வேண்டும் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.