மே 31 பொது விடுமுறை அறிவிப்பு – முக்கிய தகவல் இதோ!
கேரளாவின் கொச்சி நகரத்தில் உள்ள திருக்காக்கரா தொகுதியில் இடைத்தேர்தல் வரும் மே 31ம் தேதி அன்று நடைபெற உள்ளது .இதனை முன்னிட்டு அன்றைய தினம் தேர்தல் நடைபெறும் தொகுதியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
கேரள மாநிலத்தில் கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 40 சட்டசபை தொகுதிகளில் எல் டி எப் (இடதுசாரிகள்) கூட்டணி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. கேரளா முதல்வராக பதவியேற்ற பினராயி மீண்டும் பதவி ஏற்றார். அதனை தொடர்ந்து தற்போது கேரளாவில் கொச்சி நகரத்தை சேர்ந்த திருக்காக்கரா தொகுதியில் இடைத்தேர்தல் வரும் மே 31ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 3, 2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும். இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு திருக்காக்கரை சட்டசபை தொகுதிக்கு மே 31ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 42 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்கள் இதோ!
மேலும் அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பேச்சுவார்த்தை நடத்தும் கருவி சட்டத்தின் கீழ் செயல்படும் வணிக நிறுவனங்களுக்கு இந்த பொது விடுமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வரும் தனியார் நிறுவனங்கள், வணிக மையங்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு இந்த நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட வேண்டும். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜாபர் மாலிக் இடைத்தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு நுண் திட்டங்களை செயல்படுத்த துறை அதிகரிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தலைமை ஏற்கனவே கடந்த சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.