நாளை (மே 31) பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

0
நாளை (மே 31) பொது விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
நாளை (மே 31) பொது விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
நாளை (மே 31) பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

கேரளாவின் கொச்சி நகரத்தில் உள்ள திருக்காக்கரா தொகுதியில் இடைத்தேர்தல் நாளை (மே 31ம் தேதி) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளைய தினம் தேர்தல் நடைபெறும் தொகுதியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

மாநில அரசு அறிவிப்பு:

கேரள மாநிலத்தில் கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 40 சட்டசபை தொகுதிகளில் எல் டி எப் (இடதுசாரிகள்) கூட்டணி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து கேரளா முதல்வராக பதவியேற்ற பினராயி விஜயன் மீண்டும் பதவி ஏற்றார், தற்போது அவரது தலைமையில் நல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திருக்காக்கரா தொகுதியில் நாளை (மே 31ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையாக நாளை ஒருநாள் மட்டும் அரசு பொது விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

TCS நிறுவன ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் வேலையுடன் ஊதிய உயர்வு – முழு விவரம் இதோ!

தேர்தல் நாளன்று மக்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக வணிக நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர வெளி மாநிலங்களில் வசிக்கும் தொகுதி வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜாபர் மாலிக் இடைத்தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு நுண் திட்டங்களை செயல்படுத்த துறை அதிகரிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும் தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுல், இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட மாவட்டத்திற்கு வந்தார். தேர்தல் பொறுப்பாளர்களுடன் பல்வேறு சந்திப்புகளில் கலந்து கொண்ட அவர், வாக்கு எண்ணும் மையமான எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியின் நூலக மண்டபத்தை பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு வாக்குச்சாவடிகளையும் பார்வையிட்டார். மத்திய தேர்தல் பார்வையாளர்களான கிரிஷ் சர்மா மற்றும் ஆர்ஆர்என் சுக்லா ஆகியோருடனும் கவுல் சந்திப்புகளை நடத்தினார். இதையடுத்து கடந்த வாரம் ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!