நடப்பு நிகழ்வுகள் மே 23
தேசிய செய்திகள்
ஆந்திர பிரதேசம்
ஆசிய ரோலர் சறுக்கு சாம்பியன்ஷிப்பில் ஸ்கேட்டர் ரியா சபூ
- செப்டம்பர் 4 முதல் 14 வரை தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக ரியோ சபா ஸ்கேட்டர் பங்கேற்றார்.
கேரளம்
ஜூலை 4 ம் தேதி ராக் தீம் பூங்கா திறக்கப்படும்
- கேரள சுற்றுலா நிறுவனம் ஜடாயு எர்த் சென்டரை ஒரு ‘சர்வதேச சுற்றுலா கலாச்சார மையமாக’ பிரகடனம் செய்யவுள்ளது.
கர்நாடகம்
காமன் மினிமம் ப்ரோக்ராம்
- கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் மட்டும் பின்னர் ரூ. 6000 மாத உதவித்தொகை மற்றும் மூத்த குடிமக்களுக்காக மாதம் ரூ .6000 பொது ஓய்வூதியம் வழங்கவுள்ளது.
ராஜஸ்தான்
நோய் கண்காணிப்புக்கான ‘நிடான்’ மென்பொருள்
- ஒரு புதிய மென்பொருள், ‘நிடான்’, ராஜஸ்தானில் பருவகால மற்றும் தொற்றாத நோய்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் நோய்களின் போக்குகள் ஆகியவற்றின் முன்னறிவிப்பு, ஆய்வு மற்றும் கண்காணிப்புக்காக தொடங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்
நிலமற்ற தொழிலாளர்கள் 5% மட்டும் செலுத்தி நிலங்களை வாங்க அரசு உதவி
- SC மக்களில் நிலமற்ற தொழிலாளர்கள் விவசாய நிலம் அல்லது இரண்டு ஏக்கர் பாசன நிலத்தை 5% மட்டும் செலுத்தி வாங்க முடியும். மீதமுள்ள 8 லட்சம் ரூபாய் மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்படும்.
உத்தரபிரதேசம்
கிழக்குப் புறப்பரப்பு எக்ஸ்பிரஸ்வே
- பிரதமர் நரேந்திர மோடி கிழக்குப் புறப்பரப்பு எக்ஸ்பிரஸ்வே என்று அழைக்கப்டும் குண்டில்-கஜியாபாத்-பல்வால் (கே.ஜி.பீ.) எக்ஸ்பிரஸ்வேயை திறந்துவைத்தார்.
புது தில்லி
ஆசியான் இந்தியா திரைப்படத் திருவிழா
- ஆசியான் – இந்தியா திரைப்பட விழாவை, மத்திய தகவல் & ஒலிபரப்பு மற்றும் விளையாட்டு & இளைஞர் நலத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர், புதுதில்லி, சிரிஃபோர்ட் கலையரங்கில் 2018, மே 25 அன்று தொடங்கிவைத்தார்.
சர்வதேச செய்திகள்
கார்ல் மார்க்ஸ் கையெழுத்துப் பிரதியில் இருந்து ஒரு பக்கம் $ 5,23,000 விற்கப்பட்டது
- கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற புத்தகமான டாஸ் கேப்பிடலின் முதல் வரைவில் ,அவரது கையெழுத்துப் பிரதியின் ஒரு பக்கம், ஏலத்தில் 5,23,000 டாலர்களுக்கு விற்கப்பட்டது.
வணிக & பொருளாதாரம்
அந்நிய செலாவணி வருவாய் (FEE கள்)
- ஏப்ரல் 2017 யை விட ஏப்ரல் 2018 ல் அந்நியச் செலாவணி வருவாயில் 10.2% வளர்ச்சி அடைந்துள்ளது .
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU),ஒப்பந்தங்கள்& மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா – அங்கோலா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா மற்றும் அங்கோலா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியா பிரான்ஸ் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
- 2018 மார்ச் 10ம் தேதி புதுதில்லியில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையில் இந்தியாவும் ஃபிரான்சும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியா–டென்மார்க் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உணவுப் பாதுகாப்புத் துறையில் இந்தியா-டென்மார்க் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியா-மொராக்கோ இடையிலான ஒத்துழைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் இந்தியா – மொராக்கோ ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, பின்னேற்பு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தியா-துருக்கி இடையே கசகசா வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், துருக்கியிலிருந்து கசகசா இறக்குமதி செய்வதில், இந்தியா-துருக்கி இடையே கசகசா வர்த்தகத்தில், விரைவான – வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வகைசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியா–சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பணியாளர் மேலாண்மை மற்றும் பொதுநிர்வாகத் துறைகளில், இந்தியா-சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திட்டங்கள்
இந்தோ-டச்சு தொடக்க முயற்சி: #StartUpLink தொடங்கப்பட்டது
- 2018 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி பெங்களூரில் உள்ள தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் இந்தோ-டச்சு தொடக்க முயற்சிக்கான அதிகாரப்பூர்வ வெளியீடு நடைபெற்றது.
விருதுகள்
மேன் புக்கர் சர்வதேச பரிசு – Olga Tokarczuk
- போலந்து நாவலாசிரியரான Olga Tokarczuk ,Flights என்னும் நாவலுக்கான மேன் புக்கர் சர்வதேச பரிசு வென்றார்,
நியமனங்கள்
நியூயார்க் பங்குச் சந்தை தலைவர்
- ஸ்டேசி கன்னிங்ஹாம் -226ஆண்டு பழமையான நியூயார்க் பங்குச் சந்தையின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மொபைல் செயலிகள் & இணைய போர்ட்
மை எம்.பி. ரோஜ்கார் போர்ட்டல்
- போபால் நகரில் இளைஞர்களுக்கான வேலைகளை வழங்குவதற்காக பஹால் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேச அரசாங்கம் மை எம்.பி. ரோஜ்கார் போர்ட்டலை தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
உபர் கப்பில் ஜப்பான் இந்தியாவை தோற்கடித்தது
-
பாங்காக்கில் நடைபெற்ற உபர் கோப்பை பேட்மின்டன் போட்டியில் இந்தியா மூன்றாவது மற்றும் இறுதிப் பிரிவு-A அணியில் ஜப்பானுக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் தோல்வி கண்டது.