மே 22: சர்வதேச பல்லுயிர் தினம். தீம் :செலிப்ரேட்டிங் 25 இயர்ஸ் ஆப் ஆக்க்ஷன் ஆன் பயோடைவர்சிட்டி.
தவரப்பட்ட இணைப்பு திட்டத்திற்கு நிதியளிப்பதற்கு 15 வருடங்களை அதிகப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் (MSRDC) தெரிவித்துள்ளது.
144 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் புஷ்கரம் நடத்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
“2021ஆம் ஆண்டிற்குள் மைசூரு வாட்டர் பாசிட்டிவ் “,என்பது மைசூரு மற்றும் சுற்றியுள்ள ஏரிகளை பாதுகாப்பதற்காக இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ), மைசூரு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒரு முயற்சியாகும்.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) மூலம் கச்சா எண்ணெய் தோண்டும் பணிகள் கிருஷ்ணா மாவட்டத்தில் நாகயலங்கா தொகுதியில் தொடங்கவுள்ளது.
மே 23 முதல் 25 வரை பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானால் நடத்தப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) – பிராந்திய பயங்கரவாத அமைப்பின் (SCO-RATS) உறுப்பினர்களுடன் சந்திப்பதற்கான மூத்த பிரதிநிதிகளை இந்தியா அனுப்பியுள்ளது .
தேர்ந்தெடுக்கப்பட்ட நீர் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு நிலை என்னும் அறிக்கையை இந்திய வனவிலங்கு நிறுவனம்(WII) முதன்முறையாக வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சீன சலாமாண்டர்கள்,உணவிற்காக சட்டவிரோமாக வேட்டையாடப்படுவதால் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது.
நிலவின்இருளானமறுபக்கத்தைஆராயசீனவிண்வெளிஆய்வுத்துறைமுடிவுசெய்துள்ளது. இதன் முதற்கட்டமாக தற்போது பூமியில் இருந்து செயற்கைகோள் ஒன்றை அனுப்பியுள்ளது.
போபாலில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 3 வது வருடாந்தர கூட்டத்திற்கு முன்னதாக “சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி” பற்றிய ஒரு நாள் பிராந்திய மாநாடு நடக்கவுள்ளது.
ஹிமாசல பிரதேசத்தில் சுற்றுலா வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக நய் ரஹேன் நய் மன்சிலேன் திட்டத்தை மாநில அரசு துவக்கியுள்ளது.
உற்பத்தி பொருட்களின் விலை ஏற்ற,இறக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கத்தில் விவசாய ஒப்பந்த சட்ட மாதிரியை மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் வெளியிட்டார்.
“இன்ட்ராப்ரெனியூர்ஷிப் அண்ட் மேனேஜ்மென்ட் ஆப் பார்மர் ப்ரொடியூசிங் கம்பெனிஸ்” – க்ராண்ட் த்ரோண்டோன்
ஹாரி கேன் இங்கிலாந்தின் கால்பந்து உலகக் கோப்பையின் கேப்டனாக ரஷ்யாவில் நியமிக்கப்பட்டார்.
மியூனிச்சில் நடக்கும் ஐ.எஸ்.எஸ்.எஃப் ஷூட்டிங் உலகக் கோப்பையில் இந்தியா போட்டியிடவுள்ளது.மனு பாக்கர்,ஹீனா சித்து,ஜீத்து ராய் ஆகியோர் ஐஎஸ்எஸ்எப் ஷூட்டிங் உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ளனர்.