தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 1 கோடை விடுமுறை தொடக்கம் – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் வழக்கத்தை விட தற்போது கூடுதல் வெப்பச்சலனம் இருப்பதன் காரணமாகவும், கொரோனா நான்காம் அலை தொடங்கிவிட்டதன் காரணமாகவும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோடை விடுமுறை;
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். மேலும், இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் வைக்கப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுவதால் இந்த ஆண்டு கண்டிப்பாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
Exams Daily Mobile App Download
அதற்கான பொதுத்தேர்வு அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. பொதுத்தேர்விற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். எப்போதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து பொதுத் தேர்வும் நடத்தப்பட்டு மே மாதம் முழுக்க கோடை விடுமுறை விடப்பட்டு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மே மாதத்தில் தான் பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது. மேலும், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரூ.1,12,400/- ஊதியத்தில் அரசு வேலை – 30+ காலிப்பணியிடங்கள்..!
இதனால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு வைக்காமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தற்போது தமிழகத்தில் கொரோனா நான்காம் அலை தொடங்கி விட்டதாலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.