தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 12ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேரோட்ட திருவிழா மே 12ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு மே 12ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று அவிநாசி நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து விதமான வழிபாட்டு தளங்களிலும் கோவில் திருவிழாக்கள் கொண்டாட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து கோவிலிலும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த சித்திரை 1ம் தேதி அன்று அனைத்து கோவில்களிலும் தேரோட்ட திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Exams Daily Mobile App Download
இதே போல் திருப்பூர் மாவட்ட அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக உள்ளது. முதலை விழுங்கிய பாலகனை சுந்தரர் பதிகம் பாடி மீட்ட திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இங்கும் சித்திரை திருவிழா வருகிற மே 5ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அத்துடன் இதில் முக்கிய தேரோட்ட தினமாக வருகிற மே 12ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தினத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
அதனால் பொதுமக்கள் அனைவரும் இந்த தேரோட்ட திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் மே 12ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று அவிநாசி நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதனை ஏற்று கொண்டு அறிவிப்பு வெளியானால் அன்றைய தினம் அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.