ரூ.2000 நோட்டுகள் அதிகளவில் வங்கிகளில் டெபாசிட் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் அறிவித்திருந்த நிலையில் அதிகளவிலான பொதுமக்கள் ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ரூ.2000 நோட்டுகள்
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெற இருப்பதாக ரிசர்வ் வங்கி கடந்த மே 19 ஆம் தேதி அறிவித்திருந்தது. அதன்படி, ரூ.2000 நோட்டு வைத்திருப்பவர்கள் அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளின் மூலமாக மாற்றம் செய்து கொள்ளலாம் எனவும், விரும்பினால் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒரு நாளைக்கு ரூ.20,000 அளவுக்கு வங்கிக் கணக்குகளில் ரூபாய் 2000 நோட்டுகளை டெபாசிட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
2023 ஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் – June Current Affairs!
இந்நிலையில், அதிகளவிலான இந்தியர்கள் ரூபாய் 2000 நோட்டுகளை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்திருக்கிறது. அதாவது, 82% இந்தியர்கள் ரூபாய் 2000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளதாகவும், குறைந்த அளவிலான இந்தியர்கள் மட்டுமே வங்கிகளில் இருந்து பணத்தை மாற்று பெற்றுள்ளதாகவும் தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. மேலும், ரூபாய் இரண்டாயிரம் நோட்டுகளை திரும்ப பெற இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்த முதல் வாரத்திலேயே ரூபாய் 17 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.