மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
அரசுத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பை தவறாக பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதனை தடுக்கும் விதமாக கேரள கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு
அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக பணியில் இருக்கும் பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு என்ற பெயரில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாட்களை பெறுகின்றனர். அந்த வகையில் பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்புகள் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பை தவறாக பயன்படுத்துவதாக கண்டறிபயப்பட்டுள்ள நிலையில் இது போன்ற நடைமுறைகளை தடுக்க புதிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக, பொது மற்றும் உயர்கல்வித்துறை அளித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, கோடை விடுமுறையில் பிரசவ தேதியை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள் தங்கள் மகப்பேறு விடுப்புக் காலத்தை உண்மையான தேதியில் தொடங்குவதை குறிக்க வேண்டும் என்றும் விடுமுறைக்காக பள்ளிகளை மீண்டும் திறக்கும் தேதியை குறிப்பிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பல பள்ளி ஆசிரியர்கள் தங்களது மகப்பேறு விடுப்புகளை பள்ளிகளை மீண்டும் திறக்கும் தேதியிலிருந்து தொடங்குவதாக குறிப்பிட்டு, இதன் மூலம் இந்த விதியை தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
இதனால் அவர்களுக்கு அதிக விடுமுறைகள் கிடைக்கிறது. இதை தொடர்ந்து மகப்பேறு விடுமுறையை வழங்குவது தொடர்பான வருகையை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் சில ஆசிரியர்கள் மகப்பேறு விடுமுறைக்கான விண்ணப்பத்தை தாமதமாக குறிப்பதால், மகப்பேறு விடுப்புக்கு அனுமதி அளிப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் தகுதியற்ற விடுமுறைகளை பெறுவதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது. இதற்கிடையில், மகப்பேறு விடுப்பு மார்ச் 31 அல்லது கோடை விடுமுறையின் தொடக்கத்திற்கு பிறகு முடிவடையும் ஆசிரியர்கள் தங்கள் விடுமுறை நாட்களுக்கு பிறகும் மகப்பேறு விடுப்புகளை தொடரலாம் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.