ஜூலை 22 முதல் MasterCard புதிய கார்டுகள் வழங்க தடை – RBI அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்டுகள் வழங்க மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி ஜூலை 22 ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு:
இந்திய அரசின் கருவூலம் என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கி இந்தியாவின் நடுவண் வங்கியாகும். இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கி வருகிறது. மற்ற வங்கிகளை போல மக்கள் இந்த வங்கியை நேரடியாக பயன்படுத்த முடியாது. பாரத் ஸ்டேட் வங்கி மூலமாகவே மக்கள் பயன்படுத்த முடியும். இந்த வங்கி சேவைகளை பொதுமக்கள் நேரடியாக பயன்படுத்தாவிட்டாலும் பொதுமக்கள் சேவைகளை மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கண்காணித்து வருகிறது.
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில் அனைத்து வங்கிகளிலும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி, இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்கள் குறித்த விவரங்களில் சேகரிக்கப்படும் சர்வர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. ஆனால் இந்த உத்தரவை மாஸ்டர் கார்டு நிறுவனம் பின்பற்றவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே ஜூலை 22 ஆம் தேதி முதல் அனைத்து வங்கிகளும் மாஸ்டர் கார்டு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.26,950 ஊதியத்தில் ரயில்வே பணியிடம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
அதே நேரத்தில் மாஸ்டர் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படாது என RBI தெரிவித்துள்ளது. இது குறித்து RBI தெரிவித்துள்ள விளக்கத்தில், மாஸ்டர் நிறுவனத்திற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் அதனை அந்த நிறுவனம் சரியாக பின்பற்றவில்லை. எனவே தற்போது இந்த தடை விதிக்க அவசியம் ஏற்பட்டு விட்டது என தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு இது குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆனால் அதனை நிறுவனங்கள் பின்பற்றாத காரணத்தால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் டின்னர்ஸ் கிளப் இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் புதிய கார்டுகளை மே 1-ம் தேதி முதல் விநியோகிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்தது குறிப்பிடத்தக்கதாகும்.