தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் – கொரோனா தொற்றை தடுக்க அரசு அதிரடி உத்தரவு!
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கிய காரணத்தினால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்டிப்பாக மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என அரசின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. அரசும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். மேலும் பொது இடங்களுக்கு மக்கள் செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென தடுப்பூசியை கட்டாயம் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அரசின் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க ஏப்ரல் 21ம் தேதி கடைசி நாள்!
மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் மக்கள் பின்பற்றியதால் கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைய ஆரம்பித்தது. தொற்று குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பழையபடி மக்கள் பொது இடங்களில் சுதந்திரமாக நடமாட ஆரம்பித்தனர். இதனால் தமிழகத்தில் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை எனவும் விரும்பினால் சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம் எனவும் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 8% வரை சம்பள உயர்வு!
இந்நிலையில் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பல மடங்காக அதிகரித்துக் கொண்டு வருகிறது. பிற நாடுகளில் மட்டுமல்லாமல் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் தற்போது தொற்று அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் பொது மக்களை பாதுகாப்புடன் இருக்கும்படி தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் மால்கள், தியேட்டர்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்டிப்பாக மாஸ்க் அணியும்படி வலியுறுத்தபட்டுள்ளது. எப்போது தான் கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்கப் போகிறோமோ என மக்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர்.