தமிழகத்தில் பொது இடங்களுக்கு செல்ல முகக்கவசம் கட்டாயம் – ஓமைக்ரான் வைரஸ் எதிரொலி!!
தமிழகத்தில் ஓமைக்ரான் தடுப்பு பணியாக தலைநகர் சென்னையில் பொதுமக்கள் கட்டாயம் முகவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தடுப்பு பணிகள்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் இதுவரை 23 பேருக்கு பரவி உள்ளது. இந்த வைரஸ் அதி வேகத்துடன் பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
இதனால் மக்கள் ஆழ்ந்த அச்சத்தில் உள்ளனர். மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. இதனால் மாநில கட்டுப்பாடுகளை அறிவிக்க மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் தொகுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வைத்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை 2021 – 10வது தேர்ச்சி || உதவித்தொகை
தொடர்ந்து தலைநகர் சென்னையில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. முககவசம் அணியாத தனி நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாரமும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியுடைய ஒவ்வொருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதிகம் கூடும் இடங்களில் அரசின் நிலையான வழிகாட்டு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.