மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை – அரசு அதிரடி அறிவிப்பு!

0
மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை - அரசு அதிரடி அறிவிப்பு!
மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை - அரசு அதிரடி அறிவிப்பு!
மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை – அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தமிழகம், டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை வேண்டுகோளாக மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.

முகக்கவசம்

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவலின் 3ம் அலை குறைந்த நிலையில் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவின் 4ம் அலை வருகிற ஜூன் மாதத்தில் பரவ தொடங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Exams Daily Mobile App Download

இதில் குறிப்பாக டெல்லி, தமிழகம், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதில் கோவை மாநில முதல்வர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

1 முதல் 10ம் வகுப்புகளுக்கு மே 9 முதல் கோடை விடுமுறை துவக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

மேலும் இவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, கொரோனா பெருந் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுகோள் விடுக்கப்படும். அத்துடன் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டார்கள். முகக்கவசம் அணியாவிட்டால் மக்களுக்கு தண்டனை வழங்கப்படாது என்றும் கூறியுள்ளார். தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாகவும் இதுவரை யாரும் மருவத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!