சென்னைவாசிகள் கவனத்திற்கு, முகக்கவசம் அணியாவிட்டால் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கை!
தமிழகத்தில் தற்போது கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் சமயத்தில் முகக்கவசங்களை அணியாமல் வெளியே வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஆணையர் உத்தரவு
தமிழகத்தில் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் ஒரு நாளைக்கு 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் கடந்த மே மாதத்தில் இருந்து விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் 4 மாதங்களுக்கு பிற்பாடு பள்ளிகளும் கூட திறக்கப்பட்டுள்ளது.
சம்பளத்தில் 50% வேலையின்மை உதவித்தொகை திட்டம் – கால அவகாசம் நீட்டிப்பு!
இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழா நாட்களில் மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு அரசு தடை விதித்தது. மேலும் வார இறுதி நாட்களில் மதவழிபாட்டு தளங்களை மூட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்கள் முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
PF பயனர்கள் கவனத்திற்கு – வேலைகளை மாற்றும் போது EPF கணக்கை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?
இந்நிலையில் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள சென்னை மாநகரில் பொதுமக்கள் முகக்கவசங்களை அணியாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சின் பேடி தெரிவித்துள்ளார். கொரோனா முதலாம் அலையின் போது அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரில் மக்கள் அச்சமின்றி சுற்றித்திரிவதை கண்ட மாவட்ட நிர்வாகம் இவ்வகையான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.