தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம், மீறினால் அபராதம் – அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு!

0
தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம், மீறினால் அபராதம் - அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு!
தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம், மீறினால் அபராதம் - அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு!
தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம், மீறினால் அபராதம் – அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் தற்போது மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் தற்போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

அரசு அதிரடி உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததால் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை மறந்து சுற்றத் தொடங்கினார்கள். பஸ், ரயில் பொதுப் போக்குவரத்தின் போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணியாமல் நடமாடினார்கள். இதன் எதிரொலியாக தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்து உள்ளது. தற்போது தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 1472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

அதிகப்பட்சமாக சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 624 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். செங்கல்பட்டில் 241 பேர், கோவை 104 பேர், திருவள்ளூர் 85 பேர், காஞ்சிபுரம் 49 பேர், திருநெல்வேலி 46 பேர், கன்னியாகுமரி 39 பேர், திருச்சி 36 பேர், தூத்துக்குடி 30 பேர், சேலம் 23 பேர் என்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ஆனால், உயிரிழப்புகள் ஏற்படவில்லை.கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை வெளியிட்ட அறிவிப்பில், கோவிட் தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு WIPRO நிறுவன வேலைவாய்ப்பு – ரூ.10,500/- ஊக்கத்தொகை..!

இந்த தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய்த் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும். தமிழகம் முழுவதும் கோவிட் வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காதவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!