மார்ச் 9 குமரியில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
குமரி மாவட்டத்தின் நாகர்கோவில் பகுதியில் உள்ள கோவில் கொடைவிழாவை முன்னிட்டு மார்ச் 9ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவில் திருவிழா:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும் மிகவும் பெற்ற திருவிழாவாகும். இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல ஊர்களில் இருந்தும் மக்கள் தவறாது கலந்து கொள்வார்கள். நாகர்கோவில் ஊர் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும்.
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை முடிவு!!
உள்ளூர் விடுமுறை:
நாகர்கோவில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடைவிழா வரும் மார்ச் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மார்ச் 9ம் தேதி அன்று பொதுதேர்வுகள் இருந்தால் அவை மட்டும் நடைபெறும். உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் 10ம் தேதி அன்று வேலை நாளாக இருக்கும் என குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கை:
தற்போது கொரோனா தொற்றின் அச்சம் இருப்பதால் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவது பாதுகாப்பானதாகும். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்