தமிழகத்தில் மார்ச் 8 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மார்ச் 8ம் தேதி மாசி மாதக்கொடை விழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது;. இந்த கோயில் பெண் பக்தர்களுக்கு பெண்களின் சபரிமலை போன்றதாகும் சபரிமலை எப்படி ஆண்கள் மட்டும் வர வேண்டும் என்ற ஐதீகம் உள்ளதோ அது போல இங்கு பெண்கள் தான் அதிகம் வழிபடுவர். பெண்களின் சபரிமலை என்றே சொல்லலாம். இங்கு ஆண்டுதோறும் தமிழ் மாதமான மாசியில் திருவிழா நடைபெறும். அப்போது பெண்கள் 41 நாட்கள் பக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வருவார்கள்.
SSC CHSL 5000+காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
இக்கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. அனைத்து வித பிரச்னைகளையும் அம்மன் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை. மாசி கொடை விழாவின் போது வேண்டுதல் நிறைவேற ஆலய வளாகத்தை சுற்றிலும் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்வார். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீண்டபிறகு இங்கே வந்து, முத்தப்பம் என்னும் அப்பத்தை நைவேத்தியம் வழக்கம். மற்ற ஆண்டுகளை தொடர்ந்து 2022ம் ஆண்டு மாசி மாதக்கொடை விழா நடைபெற உள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அதிர்ச்சி! அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?
கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் முக்கிய சிறப்பு நிகழ்வு மாசி மாதக்கொடை விழா மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றய தினம் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதனால் அன்று அரசு அலுவலகங்கள் முக்கிய பணிகளுக்காக தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடு செய்ய ஏப்ரல் 9ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.