சொத்து உரிமையாளர்கள் கவனத்திற்கு – இதனை செய்யாவிட்டால் நடவடிக்கை.. மாநகராட்சியின் முக்கிய எச்சரிக்கை!

0
சொத்து உரிமையாளர்கள் கவனத்திற்கு - இதனை செய்யாவிட்டால் நடவடிக்கை.. மாநகராட்சியின் முக்கிய எச்சரிக்கை!
சொத்து உரிமையாளர்கள் கவனத்திற்கு - இதனை செய்யாவிட்டால் நடவடிக்கை.. மாநகராட்சியின் முக்கிய எச்சரிக்கை!
சொத்து உரிமையாளர்கள் கவனத்திற்கு – இதனை செய்யாவிட்டால் நடவடிக்கை.. மாநகராட்சியின் முக்கிய எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்கள் உரிய தேதிக்குள் வரியை செலுத்துமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இல்லையெனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சொத்து வரி :

தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவிலான வருவாய் சொத்து வரியில் இருந்து கிடைக்கிறது. இந்த வரியை வைத்து அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் மற்றும் சாலைகளை சீரமைத்தல், குடிநீர் இணைப்புகளை சரி செய்தல், கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது. இந்த சொத்து வரியை ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் சென்னையில் இன்னும் 5 லட்சம் பேர் சொத்து வரியை செலுத்தாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 7 லட்சம் பேர் மட்டுமே சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியை செலுத்தி உள்ளதாகவும் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக மக்களே.. மின் இணைப்பு – ஆதார் இன்னும் இணைக்கலயா? உங்களுக்கு 2 நாட்கள் தான் Time!

மீதமுள்ள நபர்கள் மார்ச். 31 ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்டால் சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும் கட்டிடம் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொருட்கள் ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!