தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு மார்ச் 24 முதல் மாதிரி தேர்வுகள் – அட்டவணை வெளியீடு!!
அரசின் அறிவிப்பு:
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் பள்ளிகள் கொரோனா காரணமாக மிகவும் தாமதமாக திறக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் காரணத்தால் ஜனவரி 19ம் தேதி அன்று பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட காரணத்தால் மாணவர்கள் மிக குறுகிய காலத்தில் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் இருந்து 30% குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. மேலும் திடீரென்று 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அரசு அறிவித்தது.
மாதிரித்தேர்வுகள்:
12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆயத்தமாகும் வகையில் மாதிரி தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் மார்ச் 24 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை மாதிரி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்