9 முதல் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 19 முதல் தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!
பள்ளி தேர்வுகள்:
குஜராத் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு ஜனவரி 11ம் தேதி முதலும், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதலும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. வழக்கமாக குஜராத் மாநிலத்தில் மூன்று கட்டமாக இறுதி தேர்வுகள் நடத்தப்படும். நடப்பு ஆண்டில் கால அவகாசம் இல்லாத காரணத்தால் இரண்டு தேர்வுகளை மட்டுமே நடத்த அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மே 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கும் என்று தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
நடப்பு ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக கல்வித்துறையால் தேர்வு நடத்த முடியவில்லை. இதனால் மூன்று தேர்வுகளுக்கு பதிலாக இரண்டு தேர்வுகளை மட்டுமே நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி, 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான முதல் தேர்வு மார்ச் 19 -27ம் தேதி வரை நடத்தப்படும்.
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பின்னர் 9, 11ம் வகுப்புகளுக்கான இறுதி தேர்வுகள் ஜூன் 7 – 15ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. 70 சதவீத மதிப்பெண்களுக்கான வினாத்தாளை, பள்ளிகள் பாடத்திட்டத்தை பொறுத்து தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 30 சதவீத மதிப்பெண்களை முதல் தேர்வில் இருந்து பள்ளிகள் கணக்கிட்டு கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்