வரி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு – பேரூராட்சி நிர்வாகம் விடுத்த முக்கிய எச்சரிக்கை!
மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் குடிநீர் கழிவு நீர் வடிகால் வரிகளை செலுத்தாமல் உள்ளவர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரி:
தமிழக அரசுக்கு சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகள் வாயிலாக பெறப்படும் வருவாய் பல்வேறு பணிகளுக்கு உதவியாக உள்ளது. அதாவது சாலைகளை சீரமைத்தல், கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல், மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தற்போது 2022- 2023ம் நிதியாண்டு முடிவடையுள்ள நிலையில் ஹோட்டல்கள், விடுதிகள், வீடுகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும் என்று நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் ஏராளமானோர் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய செயலி – பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்!!
இவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வரியை செலுத்த வேண்டும் என்று பேரூராட்சி ஒலி பெருக்கி வாயிலாக அறிவிப்பு விடுத்து வருகிறது. அந்த வகையில் வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் வரி செலுத்தாத பொது மக்கள் செலுத்த வேண்டிய வரியினை பேரூராட்சி நிர்வாகத்திடம் செலுத்த வேண்டும். இல்லையெனில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் மேலும் ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.