ஜூலை 10 வரை 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு மணிப்பூர் மாநில அரசு ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்வுகளுடன் ஜூலை 10ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்து உள்ளது. அங்கு மே 8ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா வைரஸ் நோய் பாதிப்புகள் அதிகரித்ததால் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், கச்சிங், சுராச்சந்த்பூர் மற்றும் உக்ருல் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு முதன்முதலில் மே 8 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் அமலுக்கு வந்தது. இந்நிலையில் மணிப்பூர் அரசு மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை ஜூலை 10 வரை நீட்டித்து உள்ளதாக அறிவித்து வெளியிட்டு உள்ளது.
ஜூலை 1 முதல் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில் தலைமைச் செயலாளர் ராஜேஷ் குமார் பிறப்பித்த புதிய உத்தரவின்படி, வேளாண்மை, தோட்டக்கலை, பணிகள் ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட கடைகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் மளிகை கடைகள் ஜூலை 1, 4, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை திறக்கப்படலாம்.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஜூலை மாதத்திலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. டெல்டா பிளஸ் வைரஸ், கொரோனா 3வது அலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி ஊரடங்கு தளர்வுகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.