மே 31ம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை – மாநில பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு!!!
மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக வரும் மே 31ம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக மணிப்பூர் மாநில பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
கோடை விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. நாட்டில் நடக்க இருந்த பல முக்கிய தேர்வுகளும் கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களிலும் மாணவர்களுக்கு மே மாத இறுதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்திலும் கோவிட் தாக்கம் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. ஏப்ரல் 29 ம் தேதி நிலவரப்படி, மணிப்பூர் மாநிலத்தில் 314 பேர் புதிதாக கொரோனா தாகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மணிப்பூர் அரசு இதனால் இம்பால் பகுதியை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்படுத்தினர். இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ரஞ்சித் சிங்க் அவர்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளார்.
பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் மனிதர்கள் – மே 1 சர்வதேச உழைப்பாளர் தினம்!!
பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்பு மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெரும் பள்ளி, மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். கோடை விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், விடுமுறை தினங்களில் பள்ளியில் 4 முதல் 5 பணியாளர்கள் இருந்து அலுவலக பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.